Home முக்கியச் செய்திகள் கொழும்பைச் சேர்ந்தவர் யாழில் அதிரடி கைது

கொழும்பைச் சேர்ந்தவர் யாழில் அதிரடி கைது

0

  கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் அரசடி
பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது
செய்யப்பட்டவரிடம் இருந்து 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின்
மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம்
போதை தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முனெடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் அவரை
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version