Home அமெரிக்கா ஜனாதிபதி அநுரவை சந்தித்த அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி

ஜனாதிபதி அநுரவை சந்தித்த அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி

0

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

குறித்த சந்திப்பானது, இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. 

இலங்கையின் நடவடிக்கைகள்  

அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் போன்ற சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த அட்மிரல் கோஹ்லர், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பாராட்டியுள்ளார்.

மேலும், கடற்படை பிரிவின் மனிதவள பயிற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version