‘தேசத்தின் குரல்” என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அறிவகம் அலுவலகத்தில் இன்று காலை
நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரனின் பங்குபற்றுதலுடன், ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
