Home இலங்கை அரசியல் வாக்கு கேட்டு வந்தால் அடிப்போம் : எச்சரிக்கை விடுத்துள்ள மக்கள்

வாக்கு கேட்டு வந்தால் அடிப்போம் : எச்சரிக்கை விடுத்துள்ள மக்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கக் கோரி கிராமத்துக்கு வருபவர்களை தாக்கப் போவதாக மாத்தளை (Matala) நாவுல அடவல கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்து துண்டுப்பிரசுரங்களை ஒட்டியுள்ளனர்.

அத்தோடு, பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு வந்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல்வாதிகள் 

தங்கள் கிராமத்துக்கு செல்லும் சாலை வசதி, விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினை மற்றும் போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால் இத்தேர்தலில் கிராம மக்கள் வாக்களிப்பதை புறக்கணிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகள் தங்கள் கிராமத்திற்கு வரவேண்டாம் என்றும் அவ்வாறு வந்தால் பதில் சொல்ல தயார் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version