Home உலகம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: ஆரம்பமாகியுள்ள கவுண்டவுன்- இன்னும் 100 நாட்கள் மட்டுமே!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: ஆரம்பமாகியுள்ள கவுண்டவுன்- இன்னும் 100 நாட்கள் மட்டுமே!

0

பிரான்சின் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முன் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான கவுண்டவுன் ஆரம்பமாகியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாட்களே உள்ளது.

இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுகிறது.

பாலைவன நாட்டில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கியது டுபாய் சர்வதேச விமான நிலையம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்

எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதி ஆரம்பமாகும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி முடிவடையும்.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஈபிள் டவருக்கு அருகே உள்ள சாம்ப்-டி-மார்ஸ் கார்டன் பகுதியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

133 நாடுகளை சேர்ந்த சுமார் 10500 வீரர், வீராங்கனைகள் 320 போட்டிகள் அடங்கிய 32 பிரிவு விளையாட்டுகள் என்று 15 நாட்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

நடிகை தமிதாவுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

ஆரம்பமாகியுள்ள கவுண்டவுன்

வழக்கமாக ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறுகிறதோ அந்நாட்டின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கக்கூடிய மஸ்கட் எனப்படும் ஒலிம்பிக் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் அப்படி ஒரு மஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃப்ரிஜியன் தொப்பி தான் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் மஸ்கட்.

பிரென்ச் புரட்சியின் நூற்றாண்டு நினைவு சின்னமான ஈபிள் கோபுரத்திற்கு அருகே பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கும் ஃப்ரிஜியன் தொப்பி மஸ்கட்டாக அறிமுகப்படுத்தபட்டதற்கும் காரணம் உள்ளதாக கூறப்படுகின்றது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version