Home இலங்கை அரசியல் நாட்டை பாதுகாக்கும் வரையில் ரணிலுக்கு ஆதரவு : பசில் உறுதி

நாட்டை பாதுகாக்கும் வரையில் ரணிலுக்கு ஆதரவு : பசில் உறுதி

0

நாட்டு மக்களை பாதுகாக்கும் வரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் 27 ஆண்டு கால அரசியல் பயணத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

சந்தர்ப்ப சூழ்நிலை

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் கட்சியை விட்டு வெளியேறிய போதும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டை மீட்கக் கூடிய ஆற்றல் ரணிலுக்கு இருந்துது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ரணில் விக்ரமசிங்கவிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளாக மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version