Home இலங்கை குற்றம் மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கிய விசேட புலனாய்வினருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கிய விசேட புலனாய்வினருக்கு விளக்கமறியல்

0

மட்டக்களப்பு (Batticaloa) – கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மணல் வியாபாரி ஒருவரிடம் இலஞ்சம்
வாங்கிய கைது
செய்யப்பட்ட விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவரையும் 14 நாட்கள்
விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

குறித்த தீர்ப்பானது, இன்று (26) வழங்கப்பட்டுள்ளது. 

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வரும் விசேட புலனாய்வு பிரிவைச்
சேர்ந்த இருவர் மணல் வியாபாரி ஒருவரிடம் நீண்ட நாட்களாக இலஞ்சமாக பணம்
வாங்கி வந்துள்ள நிலையில் குறித்த மண் வியாபாரி இது தொடர்பாக கொழும்பு இலஞ்ச
ஊழல் ஒழிப்பு பிரிவு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார். 

சுற்றி வளைப்பு 

இதனை தொடர்ந்து, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய நேற்று (25) பிற்பகல் கொக்கட்டிச்சோலை நகர்பகுதியில் உள்ள
வீதியில் மாறுவேடத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கண்காணிப்பில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

இதன்போது, அங்கு சென்ற விசேட புலனாய்வு பிரிவைச்
சேர்ந்த இருவர் குறித்த மண் வியாபாரியிடம் இலஞ்சமாக 2 ஆயிரம் ரூபாவை வாங்கும் போது மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து
கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட புலானர்வு பிரிவைச் சேர்ந்த சாஜன்
ஒருவரும் கொஸ்தாப்பல் ஒருவரும் இன்று மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர். 

இதன்போது, இருவரையம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறும் இவர்களுக்கு எதிரான வழக்கினை கொழும்பு புதுக்கடை
நீதிமன்றில் பதிவு செய்து முன்னிலைபடுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version