Home முக்கியச் செய்திகள் இணையம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தவறான காணொளிகள் : தம்பதியினர் கைது

இணையம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தவறான காணொளிகள் : தம்பதியினர் கைது

0

சீன நிறுவனமொன்றிற்கு தவறான காணொளிகளை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பி விற்பனை செய்து வந்த இரண்டு இளம் தம்பதியினரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை (Piliyandala) காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலியந்தலை படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில் (Kollupitiya) வசித்த தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் படகெத்தர பிரதேசத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

அத்தோடு, காவல்துறையினர் சோதனையின் போது மற்றொரு தம்பதியினர் இருந்ததும் அவர்கள் மோசடியில் நேரடியாக ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய இரு தம்பதியினரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைதுசெய்யப்பட்ட தம்பதியர்கள் மயக்க மருந்து மாத்திரைகள் வைத்திருந்ததாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version