Home முக்கியச் செய்திகள் நல்லூர் ஆலய தேர் திருவிழாவின் போது காவல்துறையினரால் வயதான மூதாட்டிக்கு நேர்ந்த அநீதி !

நல்லூர் ஆலய தேர் திருவிழாவின் போது காவல்துறையினரால் வயதான மூதாட்டிக்கு நேர்ந்த அநீதி !

0

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழாவின் போது வயதான மூதாட்டி ஒருவருக்கு ஆலய வளாகத்திற்குள் செல்வதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவிக்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் (Nallur Kandaswamy Temple) தேர்திருவிழா நேற்று(1) நடைபெற்றது.

இதன்போது போது ஆலய மதில் வழியாக செல்வதற்கு குறித்த வயதான மூதாட்டி முனைந்துள்ளார்.

அங்கு இருந்த காவல்துறையினர் அந்த மூதாட்டி உள்ளிட்ட சிறுவர்களுக்கு அவ்வழியாக செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.

அத்துடன், “இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த நபர் ஒருவரால் ஆலயத்திற்குள் ஜீப் ரக வாகனத்தில் வரும் பிக்குகளிற்கு அனுமதி வழங்குகின்றீர்கள், ஆனால் எங்களை அனுமதிக்க முடியாதா” என கேள்வி எழுப்பினார்.

இருப்பினும், குறித்த அதிகாரிகள் மூதாட்டிக்கு அனுமதி வழங்காததுடன் அசமந்த போக்காக பதிலும் வழங்கியுள்ளனர்.

https://www.youtube.com/embed/wjDA_0kTLB0

NO COMMENTS

Exit mobile version