Home இலங்கை சமூகம் அமைச்சர் உறுதிமொழி : இடைநிறுத்தப்பட்டது தொழிற்சங்கப் போராட்டம்

அமைச்சர் உறுதிமொழி : இடைநிறுத்தப்பட்டது தொழிற்சங்கப் போராட்டம்

0

இலங்கை (Sri Lanka) சுங்கத் திணைக்களப்  பணியாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்க தீர்மானித்திருந்த தொழிற்சங்கப் போராட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது

குறித்த போராட்டமானது நாளைய தினம் (04) முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தாம் தலையிட்டு தீர்வு காண்பதாக வழங்கப்பட்ட எழுத்துமூல வாக்குறுதியினால் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி மற்றும் கலால் திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது. 

எழுத்துமூல வாக்குறுதி

அந்தவகையில், உள்ளக தொழிற்சங்கங்களுடன் தமது அமைப்புக்கள் செய்து கொண்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (02) நிதியமைச்சில் அமைச்சர் சியம்பலாபிட்டிய தலைமையில் இடம்பெற்றதுடன், இது தொடர்பான எழுத்துமூல வாக்குறுதியும் இன்று இந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Source: https://ibctamil.com/article/customs-union-strike-tomorrow-1720019535

NO COMMENTS

Exit mobile version