Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணத்தில் மனைவியை எரித்து படுகொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணத்தில் மனைவியை எரித்து படுகொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நேற்றைய தினம் (19) புதன்கிழமை வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி மானிப்பாய் காக்கை தீவு பகுதியில் குடும்ப பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

நீதிமன்ற விசாரணை

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் (Manipay) காவல்துறையினர்  கணவனை கைது செய்து யாழ். நீதாவன் நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகள் முடிவடைந்த நிலையில்,படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனை நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பளித்து, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version