Home இலங்கை அரசியல் வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் : ஆறாவது நாள் இன்று

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் : ஆறாவது நாள் இன்று

0

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆறாவது நாளாக இன்று (24) நடைபெறுகின்றது.

அதன்படி, இன்று காலை 09.30 முதல் மாலை 06.30 வரை இன்றைய நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. 

காலை 09.30 முதல்10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் மாலை 06.00 வரை 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாலை 06.00 முதல் 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான ஆளுங்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி முதல் நாளை (25) வரை இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/Xs8NmS4_b3g

NO COMMENTS

Exit mobile version