கந்தளாய் சீனித் தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய பன்மடங்கு நிதி ஒதுக்கீடு
செய்ய வேண்டும் என தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சண்முகம் குகதாசன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (18.03.2025) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கோரினார்.
இதன்போது மேலும் அவர், “திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் சீனி ஆலையானது
மோசமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை மறுசீரமைக்க 26 மில்லியன் ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டை பத்து மடங்காக அதிகரித்தால் கூட அதனை
மீள செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இதற்கான ஒதுக்கீடு பன்மடங்காக
அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
