Home இலங்கை அரசியல் கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல்

0

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பான காலத்தின் தேவை
குறித்த கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் (Kilinochchi) இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், இன்று (16.06.2024) தமிழர் பொதுக் கட்டமைப்பு மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூகத்தினர் ஆகியோருக்கிடையில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் பேராசிரியர் ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்
ம.நிலாந்தன், அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கம் மற்றும் மாவட்டத்தின் சிவில்
அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

பொது அமைப்புக்கள்

இதன்போது, பொதுவேட்பாளர் தொடர்பாக பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின்
உறுப்பினர்களும் தமது கருத்தினை தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version