Home இலங்கை அரசியல் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சஜித் தரப்பினருக்கும் இடையே மீண்டும் கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சஜித் தரப்பினருக்கும் இடையே மீண்டும் கலந்துரையாடல்

0

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (UNP) ஐக்கிய மக்கள் சக்திக்கும் (SJB) இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (28) இரவு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற விவாதம் எழுந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுடனும் இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.

கலந்துரையாடல் 

அதன்படி, இன்று மூன்றாம் சுற்று கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய கலந்துரையாடல்களின் போது முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் இரு கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடப்படும் என்றும், அவர்களின் கருத்துக்கள் இன்றைய கலந்துரையாடலில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் குழு இன்று (28) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் (Sajith Premadasa) இந்த முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version