Home இலங்கை பொருளாதாரம் இரண்டாம் நாளாகவும் தொடரும் IMF உடனான கலந்துரையாடல்

இரண்டாம் நாளாகவும் தொடரும் IMF உடனான கலந்துரையாடல்

0

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இரண்டாவது நாளாகவும் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

வேலைத்திட்டத்தின் இலக்குகள்

இந்தச் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், (Krishna Srinivasan) சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் (Dr. Peter Breuer) உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் மற்றும் ஐ.எம்.எப் பேச்சுவார்த்தைகளுக்கான நியமிக்கப்பட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைந்து கொள்ளும் அதேநேரம், மக்கள் சுமைகளை குறைப்பதற்கான மாற்று வழியில் செல்வதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/discussions-with-imf-continue-for-second-day-1728023338

NO COMMENTS

Exit mobile version