Home இலங்கை சமூகம் பதுளைக்கான தொடருந்து சேவைகளில் இடையூறு

பதுளைக்கான தொடருந்து சேவைகளில் இடையூறு

0

Courtesy: Sivaa Mayuri

ஒன்பது வளைவுகள் தொடருந்து பாலத்தில் இந்திய – இலங்கை கூட்டு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடத்தப்படுவதன் காரணமாக, கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் மலையகத்துக்கான தொடருந்து சேவைகளில் இடையூறுகள் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (09.10.2024) முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து பதுளைக்கு செல்லும் தொடருந்துகள் எல்ல அல்லது பண்டாரவளை தொடருந்து நிலையங்களில்  நிறுத்தப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 6 நாட்களுக்கு காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை தொடருந்துகள், பதுளைக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு அறிவுறுத்தல்

அதேபோன்று, எதிர் திசையில் செல்லும் தொடருந்துகள் இந்த காலப்பகுதியில் பதுளைக்குப் பதிலாக எல்ல அல்லது பண்டாரவளையில் இருந்து புறப்படவுள்ளன.

எனவே இதற்கமைய தமது பயணங்களை திட்டமிடுமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.  

Source: https://tamilwin.com/article/disruption-in-train-services-to-badulla-1728435815

NO COMMENTS

Exit mobile version