தங்காலை கடற்றொலில் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கலந்த தண்ணீரை குடித்த நாய்களின் செயற்பாடுகள் தொடர்பிலான காணொளி வேகமாக பரவி வருகிறது.
மேலும் சில நாய்கள் துறைமுகப் பகுதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த தண்ணீரை குடித்த குறித்த நாய்களில் மூன்று, அங்கு சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.
துறைமுகப் பகுதியில் அடிக்கடி சுற்றித் திரிந்த நாய்கள் நேற்று விசித்திரமான நடத்தையைக் காட்டியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
சுமார் மூன்று நாய்கள் ஒரே இடத்தில் சுற்றி வட்டமிடுவதையும் மற்றொரு நாய் நிற்க சிரமப்பட்டு தரையில் படுத்திருப்பதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
@lankasrinews இலங்கையில் போதைப்பொருள் கலந்த தண்ணீரை குடித்த நாய் வைரலாகும் காணொளி! #SriLanka #Dog #ViralVideo #Drugs #AnimalNews #BreakingNews #Trending #SocialMedia #CurrentAffairs #SriLankaNews #Viral #PublicConcern #Awareness #NewsUpdate #OnlineTrend #AnimalWelfare #ShockingVideo #PublicReaction #NewsAlert #TrendingNow
♬ original sound – Lankasri News
