Home இலங்கை அரசியல் தேர்தல் தொடர்பில் தாமதம் வேண்டாம் : ஆணைக்குழுவிடம் வலியுறுத்தும் ஜே.வி.பி

தேர்தல் தொடர்பில் தாமதம் வேண்டாம் : ஆணைக்குழுவிடம் வலியுறுத்தும் ஜே.வி.பி

0

மிக விரைவில் அதிபர் தேர்தலுக்கான தினத்தை அறிவித்து தேர்தல் தொடர்பில் மக்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களை இல்லாது செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா(tilvin silva) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி நேற்று (17) ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அதிபர் தேர்தல் தொடர்பான தினத்தை அறிவிக்கும் அதிகாரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது. இந்த தினம் தொடர்பில் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு

இதன்படி தங்களுக்குரிய அதிகாரங்களுக்கமைய கூடிய விரைவில் தேர்தல் தினத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களின் செயற்பாடுகளினால் அதிபர் தேர்தல் நடக்குமா இல்லையா என்று மக்கள் சந்தேகத்துடன் இருக்கின்றனர்.ஆணைக்குழுவும் காலத்தை எடுக்குமா என்று மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஆனால், ஆணைக்குழு காலம் தாழ்த்தாது தினம் தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுத்து மக்களிடையே உள்ள சந்தேகத்தை இல்லாமல் செய்ய வேண்டும்.

இதற்கு முன்னர் பல அதிபர் தேர்தல்கள் நடந்துள்ளன.

ஆனால், இம்முறை நடக்கும் தேர்தல் முக்கியத்துவமிக்கதாக இருக்கிறது. அதிபர் ஒருவர் பதவி விலகிய பின்னர், நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய அதிபர் ஒருவர் தெரிவான பின்னர் நடக்கவுள்ள முதலாவது தேர்தலாகும்.

 மக்கள் போராட்டத்தின் பின்னர் நடக்கும் முதல் தேர்தல்

அதேபோன்று மக்கள் போராட்டத்தின் பின்னர் நடக்கும் முதல் தேர்தலாகும்.

அதேபோன்று அதிகளவான தடைகளை கொண்ட தேர்தலாகவும் இது இருக்கின்றது.

மக்கள் தேர்தலை எதிர்பார்க்கையில் ஆட்சியாளர்கள் தேர்தலுக்கு பயப்படுகின்றனர். தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதால் ரணிலின் பின்னால் இருப்பவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசியலமைப்பில் ஏதாவது ஓட்டைகள் இருக்கின்றனவா என தேடிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், இப்போது அதிபர் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது.

அதன்படி, கூடிய விரைவில் தேர்தல் தினம் தொடர்பில் தீர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயாதீன ஆணைக்குழுவே என்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு நிரூபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

NO COMMENTS

Exit mobile version