Home இலங்கை அரசியல் சிவிகே சிவஞானம் – ஈபிடிபி சந்திப்பு! ஆதரவு யாருக்கென விரைவில் அறிவிக்கவுள்ள டக்ளஸ்

சிவிகே சிவஞானம் – ஈபிடிபி சந்திப்பு! ஆதரவு யாருக்கென விரைவில் அறிவிக்கவுள்ள டக்ளஸ்

0

தமிழரசுக்கட்சியின் பதில்தலைவர் சிவிகே சிவஞானம் தங்களை சந்தித்து ஆதரவு கோரியதை பற்றி தாங்கள் இன்னும் சிந்தித்து வருவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“வெகுவிரைவில் இந்த விடயம் தொடர்பில் அறிவிப்போம்.

மக்கள் நலன் சார்ந்து ஆட்சியை முன்னெடுக்க வருபவர்களுக்கு ஆதரவு கொடுக்க கட்சி தீர்மானித்துள்ளது.

மேலும் இது தவிர தமிழரசுக்கட்சிக்கும் தங்களுக்கும் வேறெந்த ஒப்பந்தங்களும் கிடையாது” என குறிப்பிட்டார்.

இந்த விடயங்களை கீழுள்ள காணொளியில் விரிவாக காணலாம்… 

NO COMMENTS

Exit mobile version