Home இலங்கை சமூகம் யாழிலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்க டக்ளஸ் நிதியுதவி

யாழிலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்க டக்ளஸ் நிதியுதவி

0

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைத்து புனரமைப்பதற்கான
நடவடிக்கைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்(Douglas Devananda) நிதி ஒதுக்கீடு பெற்றுக்
கொடுக்கப்பட்டுள்ளது.

தமது ஆலயங்கள் மீள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான
நிதியுதவியை பெற்றுத்தருமாறும் ஒருதொகுதி ஆலய நிர்வாகத்தினரால் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

நிதியுதவி

இந்நிலையில், குறித்த தரப்பினருக்கான காசோலைகள் இன்று(15.06.2024) அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்து கலாசார திணைக்களத்தின் 2024 இற்கான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக
கிடைக்கப்பெற்ற நிதியே குறித்த ஒரு தொகுதி ஆலயங்களுக்கு நிதியுதவியாக இன்று(15)
வழங்கி வைக்கப்பட்டன.

இதனடிப்படையில், தெரிவு செய்யப்பட்ட சுமார் 25 ஆலயங்களுக்கு தலா இரண்டு
இலட்சம் ரூபா வீதம் நிதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version