Home இலங்கை அரசியல் பொது தேர்தலில் தென்னிலங்கையில் களமிறங்க தயாராகும் டக்ளஸ் அணி

பொது தேர்தலில் தென்னிலங்கையில் களமிறங்க தயாராகும் டக்ளஸ் அணி

0

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும்
போட்டியிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானாந்தா
தெரிவித்துள்ளார்.

யாழ். தெல்லிப்பளையில் நேற்று டக்ளஸ் தேவானாந்தா தலைமையில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே
டக்ளஸ் தேவானாந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானாந்தா

அத்தோடு மக்கள் மத்தியில் உரையாற்றிய டக்ளஸ் தேவானாந்தா, தான் மீண்டும்
நாடாளுமன்றம் செல்வேன் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தேர்தலின் பின்னர் ஆட்சியில்
இருப்பவர்களுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கட்சியின்
கொள்கையின்படி இணைந்து செயற்பட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version