Home இலங்கை அரசியல் அரசியல் நலனை முன்னிறுத்தி மக்களை வழிநடத்த முயற்சி: டக்ளஸ் சுட்டிக்காட்டு!

அரசியல் நலனை முன்னிறுத்தி மக்களை வழிநடத்த முயற்சி: டக்ளஸ் சுட்டிக்காட்டு!

0

சுயநல அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் நலன்களுக்காக மக்களை தவறான
திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி (Kilinochchi) பாரதி மண்டபத்தில் ஜனாதிபதியின் கல்விப் புலமைப் பரிசில் வழங்கும்
நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அவர்
தொடர்ந்து உரையாற்றுகையில், 

“பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு முழுமையாக விடுபடாத போதிலும் மக்களின்
எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகூடிய
முன்னுரிமை அளிக்கின்றார்.

இறால் பண்ணை 

இதனடிப்படையில், தொடர்ந்தும் ஜனாதிபதி, நாம்
பயணிப்பதன் ஊடாகவே ஓர் சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்
எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கெளதரிமுனை KN/68 கிராம அலுவலர் பிரிவின் வினாசியோடை கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்றினால் 25 ஏக்கரில்
சுமார் 1000 மல்லியன் ரூபா முதலீட்டில் அமைய பெற்றுள்ள நவீன இறால் பண்ணையின்
செயற்பாடுகளை டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/douglas-speech-in-kilinochchi-1720964027

NO COMMENTS

Exit mobile version