Home இலங்கை சமூகம் சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரச்சினைகள் குறித்து தீர்க்கமான முடிவு: டக்ளஸ் உறுதி

சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரச்சினைகள் குறித்து தீர்க்கமான முடிவு: டக்ளஸ் உறுதி

0

சாவகச்சேரி ஆதார
வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் என வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த
குற்றச்சாட்டுக்கள் உட்பட 16 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்று (21.07.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ” சாவகச்சேரி வைத்தியசாலை குறித்த குற்றச்சாட்டுகளில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படக்கூடிய
பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். 

அதேவேளை, நான் குறித்த துறைசார்ந்த
அமைச்சர் இல்லை என்பதால் ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர்
ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆகியோருடன் கலந்துரையாடி
தீர்க்கமான ஒரு பதிலை வழங்குவோம்” என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version