Home இலங்கை சமூகம் வவுனியாவில் மது போதையில் பேருந்து செலுத்திய சாரதி: மடக்கிப்பிடித்த காவல்துறையினர்!

வவுனியாவில் மது போதையில் பேருந்து செலுத்திய சாரதி: மடக்கிப்பிடித்த காவல்துறையினர்!

0

வவுனியா ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் இன்று(29) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா தலைமைப் காவல்துறை பிரிவுக்குட்ட பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த போது ஏ9 வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மது போதையில் பேருந்தை செலுத்தியமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் பரவும் புதிய வைரஸ்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பேருந்து சாரதி கைது 

இதையடுத்து பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பேருந்தும் வவுனியா காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் சாரதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போலியான ஆவணத்தில் வெளிநாட்டு பயணம்: இரு பெண்கள் கைது

ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழர் தரப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version