Home இலங்கை அரசியல் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை

மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை

0

Courtesy: Sivaa Mayuri

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பிக்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த முயற்சிக்கு தேவையான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாக, சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்தும் உறுதிப்படுத்தியிருந்தார்.

அநுர – மல்கம் ரஞ்சித் சந்திப்பு

ஏற்கனவே, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விடயம் தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version