Home இலங்கை சமூகம் வடக்கில் 7 வருடங்களின் பின் திறக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம்

வடக்கில் 7 வருடங்களின் பின் திறக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம்

0

வவுனியாவில் (Vavuniya) கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் 7
வருடங்களின் பின்னர் இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018ஆம் ஆண்டு வவுனியா
மதவுவைத்தகுளத்தில் 293மில்லியன் ரூபாய் செலவில் விசேட பொருளாதார
மத்தியநிலையம் அமைக்கப்பட்டது.

அதனை ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்று
அரசியல்வாதிகளுக்கிடையில் ஏற்ப்பட்ட இழுபறிகளுக்கு மத்தியில்
மதவுவைத்த குளத்தில் அது அமைக்கப்பட்டது.

இயங்க முடியாத சூழல்

எனினும் அமைக்கப்பட்டு ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் பல்வேறு காரணங்களால்
அது இயங்க முடியாத சூழல் ஏற்பட்டதுடன் அதன் கட்டுமானத்திலும் பழுதுகள்
ஏற்ப்பட்டது.

இந்தநிலையில் குறித்த நிலையத்தில் மீண்டும் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு
இன்றையதினம் மக்கள் பாவனைக்காக அது கையளிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருளாதார மத்தியநிலையத்தில் 50 கடைகள் அனைத்து வசதிகளுடனும்
அமைக்கப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக 35 கடைகள் வவுனியா மொத்த வியாபாரசந்தை
வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கடை சதோச நிறுவனத்திற்கும்
வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக வாணிப அமைச்சர் வசந்தசமரசிங்க மற்றும் பிரதி
அமைச்சர்களான எம்.ஜெயவர்த்தன,உபாலிசமரசிங்க, மாநகரசபை முதல்வர்
சு.காண்டீபன், பாராளுமன்ற
உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ. திலகநாதன் ஆகியோரால் நாடாவெட்டி
திறந்துவைக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version