அம்பாறையில் (Ampara) முச்சக்கர வண்டியொன்று வாய்க்காலில் விழுந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்
பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விபத்தில் 26 வயதுடைய சம்மாந்துறை மஜீட்புரம் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர
வண்டி சாரதி படுகாயடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, காயமடைந்த நபர், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
