போதைப்பொருளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகுடன் ஆறு
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரைக்கு கொண்டுவரப்படும் படகு
இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது
இந்த படகு தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும் விசாரணைக்காக படகு தற்போது கரைக்கு கொண்டுவரப்படுவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
