Home இலங்கை அரசியல் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்: ஆணைக்குழுவின் எச்சரிக்கை

நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்: ஆணைக்குழுவின் எச்சரிக்கை

0

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசாரங்களையும் நாளை நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறைத்தண்டனையும் அபராதமும் 

இதற்கமைய, நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் ஒரு மாதத்திற்கு குறையாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

மேலும், துண்டுபிரசுரங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாகவும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என ஆணைக்குழு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version