Home இலங்கை அரசியல் மட்டக்களப்பில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம்

மட்டக்களப்பில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம்

0

மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர்
பா.அரியேந்திரனின் கூட்டத்திற்கு ஆதரவு தேடி நாடாளுமன்ற உறுப்பினர்
கோ.கருணாகரன் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம்
உட்பட குழுவினர் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பிரசார நடவடிக்கையானது இன்று (16) மத்திய பேருந்து நிலையத்தில்
இருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை (17) பிற்பகல் 3 மணிக்கு கல்லடியில் உள்ள மீன் பூங்காவிற்கு அருகிலுள்ள மைதானத்தில்  ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின்
மாபெரும் பிரசார கூட்டம் இடம்பெறவுள்ளது.

துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

இந்த கூட்டத்திற்கு மக்களை வருமாறு அழைப்பு விடுத்து இந்த
பிரசார நடவடிக்கையை இன்று ரேலோ கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான கோ.கருணாகரன். ஈ.பிஆர்.எல்.எப் கட்சி முக்கியஸ்தரும் கிழக்கு
மாகாண முன்னாள் உறுப்பினருமான இரா, துரைரெட்ணம், கிழக்கு மாகாண முன்னாள் பிரதி
தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கொண்ட குழுவினர்
பொது வேட்பாளரின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பிரசார நடவடிக்கையினை
ஆரம்பித்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து மக்களிடம் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரியும் நாளை
இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு
விநியோகித்தனர்.

NO COMMENTS

Exit mobile version