Home இலங்கை அரசியல் தபால்மூல வாக்களிப்பு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

தபால்மூல வாக்களிப்பு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

0

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும்
பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் செயலகம், அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால்மூல
வாக்குகளை நாளை (04.09.2024) அளிக்க முடியும் என ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க
கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு, பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில்
ஈடுபடுவோர் முதல் கட்டமாக வாக்களிக்கவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, பொலிஸார் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களும்
தபால்மூலமாக வாக்களிக்கவுள்ளனர். 

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version