Home இலங்கை அரசியல் மாகாண ஆளுநர்களுக்கு எதிராக காவல்துறை மா அதிபருக்கு கடிதம்

மாகாண ஆளுநர்களுக்கு எதிராக காவல்துறை மா அதிபருக்கு கடிதம்

0

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் (Election Commision) காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு (Deshabandu Tennakoon) கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களை இரத்து செய்யாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாகாண ஆளுநர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி கண்காணிப்பு பணிகளுக்காக முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போது ஒத்தி வைக்கப்பட்ட தேர்தலுக்கான வேட்பு மனு கையளிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட தரப்பினர் அண்மையில் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு 

இதனையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவிப்புக்கமைய, கிழக்கு (Eastern Province) மற்றும் தென் மாகாண (Southern Province) ஆளுநர்கள் அந்த நியமனங்களை இரத்து செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் மேல் (Western Province) மற்றும் மத்திய மாகாண (Central Province) ஆளுநர்கள் இதுவரை அதற்கு எந்த வித உரிய பதிலையும் வழங்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/election-commission-sent-a-letter-to-the-sl-igp-1721710539

NO COMMENTS

Exit mobile version