Home இலங்கை அரசியல் யாழில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு

யாழில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு

0

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேர்தல் அலுவலகம் யாழ்ப்பாணம், அரியாலை –
மணியந்தோட்டம் பகுதியில் இன்று (26.10.2024) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை
வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

இதன்போது, சக வேட்பாளர்களான சுதர்சிங் விஜய்காந்த், நியூட்டன் எட்வேட்,
ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மூக்கு கண்ணாடி சின்னம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூக்குக் கண்ணாடிச் சின்னத்தில் ஐக்கிய
தேசிய சுதந்திர முன்னணி யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை
குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version