Home இலங்கை சமூகம் வன்னி தேர்தல் தொகுதியில் பூா்த்தி செய்யப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள்

வன்னி தேர்தல் தொகுதியில் பூா்த்தி செய்யப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள்

0

Courtesy: Shanmugam Thavaseelan

வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான
அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர்
அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (20) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

“முல்லைத்தீவு மாவட்டத்தில் 89, 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள
நிலையில் 137 வாக்கெடுப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

முக்கிய பணி 

வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு
மாவட்டத்தில் தேர்தலுக்கான மிக முக்கிய ஏற்பாடாகிய வாக்களிப்பு நிலையங்களுக்கு
வாக்கு பெட்டி, வாக்கு சீட்டு அனுப்புகின்ற பணி நிறைவடைந்ததுள்ளது.

இன்று காலை முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலத்திலிருந்து 137 வாக்களிப்பு
நிலையங்களுக்கு அதற்கு பொறுப்பாக இருக்கின்ற சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்
தலைமையில் வாக்கு பெட்டி, வாக்கு சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்கும் பணியிலே 38 வலயங்களாக
பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கு பொறுப்பாக இருக்கின்ற தெரிவு அத்தியட்சக அலுவலகர்
இந்த கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு யானைகள் தொல்லை இருப்பதால் அதை
எதிர்கொள்ள கூடிய விடயம் தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.

இந்த
பணியில் குறிப்பாக கிராம அலுவலர்கள் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் பொறுப்பாகவுள்ள
பிரதேச செயலாளர்கள் இதனை கவனிக்கவுள்ளார்கள்”  என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version