Home இலங்கை அரசியல் குருநாகலையில் நிறைவடைந்துள்ள தேர்தல் ஏற்பாடுகள்

குருநாகலையில் நிறைவடைந்துள்ள தேர்தல் ஏற்பாடுகள்

0

Courtesy: uky(ஊகி)

இன்றைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதுடன் குருநாகல் மாவட்டத்தில் வாக்களிப்புக்காக சகல பெட்டிகளும் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஆர். எம். ஆர். ரத்நாயக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த மாவட்டத்திலுள்ள 14 தேர்தல் தொகுதிகளில் இருந்து 1 417 226 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய நிலையங்கள்

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“இந்த மாவட்டத்தில் 977 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வாக்குகள் எண்ணுவதற்காக 04 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் குருநாகல் தொழில் நுட்பக் கல்லூரி, சேர் ஜோன் கொத்தலாவெல கல்லூரி, குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி, மலிய தேவ பெண்கள் கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் இந்த வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்தல் கடமைக்காக சகல போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version