Home இலங்கை அரசியல் 22ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

22ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

0

உத்தேச 22ஆம் திருத்தச் சட்டம் ஜனாதிபதித் தேர்தலக்கு இடையூறாக அமையாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தை இன்றையதினம் (19.07.2024) பதுளையில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பினை வெளியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல்

22ஆம் திருத்தச் சட்டமூல யோசனை ஜனாதிபதித் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

  

இதேவேளை, 22ஆம் திருத்தச் சட்டம் மூலம் குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/election-will-held-1721396452

NO COMMENTS

Exit mobile version