Home இலங்கை பொருளாதாரம் மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இவ்விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

மின்கட்டண

அத்தோடு, இது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதேவேளை, இந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version