Home இலங்கை சமூகம் எல்ல பேருந்து விபத்து: அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரி களத்துக்கு விஜயம்

எல்ல பேருந்து விபத்து: அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரி களத்துக்கு விஜயம்

0

எல்ல – வெல்லவாய வீதியில் 15 உயிர்களைப் பலிகொண்ட பேருந்து விபத்து தொடர்பான
விசாரணைக்குப் பொறுப்பான அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரி, விபத்துக்கு
தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பதைக் கண்டறிய பேருந்தின் சிதைவுகளை ஆய்வு
செய்ய நாளை எல்ல பகுதிக்குச் செல்ல உள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்து மணிக்கு 70 கிலோமீற்றருக்கும் அதிகமான
வேகத்தில் பயணித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தகுதிச் சான்றிதழ்

இந்நிலையில், தடுப்பு தொகுதி (பிரேக்) இயங்காததால் பேருந்து அதிக வேகத்தில்
பயணித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், பேருந்து இயங்கும் நிலையில் உள்ளதாகக் கூறும் தகுதிச் சான்றிதழும் பேருந்தில்
காணப்பட்டது.

அந்த தகுதிச் சான்றிதழ் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார்
தெரிவிக்கின்ற நிலையில், மீட்கப்பட்ட பேருந்தின் சிதைவுகள் தற்போது எல்ல காவல் நிலையத்தில் உள்ளன.

NO COMMENTS

Exit mobile version