Home உலகம் ஜெர்மனி ஜனாதிபதி திறமையற்ற முட்டாள்: பதவி விலக வேண்டும் – எலான் மஸ்க் அதிரடி

ஜெர்மனி ஜனாதிபதி திறமையற்ற முட்டாள்: பதவி விலக வேண்டும் – எலான் மஸ்க் அதிரடி

0

ஜெர்மன் (Germany) ஜனாதிபதி ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) உடனடியாக பதவி விலக வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒலாப் ஸ்கோல்ஸ் திறமையற்ற முட்டாள் அவர் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk) தனது எக்ஸ் தள பதிவில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

நகரின் மையப்பகுதியில் சந்தை

கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி ஜேர்மன் நாட்டின் சண்டோனி அன்ஹட் மாகாணம் மக்டக்பெர்க் நகரின் மையப்பகுதியில் சந்தை அமைக்கப்பட்டிருந்தது.

 

இந்த சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை (20.12.2024) இரவு சந்தையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது.

இந்த கோர சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பயங்கரவாத தாக்குதல்

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தித்தனர்.

மேலும், கார் விபத்தை ஏற்படுத்திய சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான வைத்தியரை கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில் “ஜெர்மன் அதிபர் ஓலாப் ஷோல்ஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகி வருகிறது.

Source: https://ibctamil.com/article/elon-musk-attack-christmas-market-in-germany-1734877673

NO COMMENTS

Exit mobile version