Home இலங்கை அரசியல் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு

0

எல்பிட்டிய (Elpitiya) பிரதேச சபைத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, குறித்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் 26.08.2024 முதல் 13.09.2024 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த கால அவகாசம் எக்காரணத்திற்காகவும் நீட்டிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு (ECSL) அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு

அந்தவகையில், தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு தேவையான 2024 வாக்காளர் பட்டியல் தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான எல்பிட்டிய பிரதேச சபை வாக்காளர் பட்டியல்களும் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக பின்வரும் இடங்களில் காட்சிப்படுத்தப்படும்.

காலி மாவட்ட தேர்தல் அலுவலகம் 

எல்பிட்டிய பிரதேச செயலகம்

எல்பிட்டிய பிரதேச சபை அலுவலகம்

எல்பிட்டிய பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் (ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் சொந்தமான வாக்காளர் பட்டியல்) என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version