Home முக்கியச் செய்திகள் அம்பாறையில் மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவனுக்கு நேர்ந்த அவலம்!

அம்பாறையில் மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவனுக்கு நேர்ந்த அவலம்!

0

அம்பாறையில் (Ampara) மருத்துவத் துறைக்குத் தெரிவான மாணவன் ஒருவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று (14) நீலகிரி ஆற்றில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை- காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் எனப்படும் 20 வயது மாணவனே இந்த சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன்

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவராவார்.

இவர் அண்மையில் வெளியான 2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் 23 ஆவது இடத்தில் மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ளார்.

மேலதிக விசாரணை 

இந்நிலையில், அவர் தனது குடும்பத்துடன் மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்று அங்கிருந்து இன்று (14) காலை வரும் போது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றில் நீராடிய போது மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version