Home இலங்கை அரசியல் பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்கும் டக்ளஸ் தரப்பு

பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்கும் டக்ளஸ் தரப்பு

0

பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணை சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, இம்முறை வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், கொழும்பு மாவட்டத்திலும் வேட்புமனுக்களை வழங்க கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் த.புஸ்பராசா ​​தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுத் தேர்தலுக்குத் தேவையான வேட்புமனுக்கள் தயாரிக்கும் பணிகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதாகவும், தனது கட்சி கூட்டணி அமைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டக்ளஸ் நம்பிக்கை

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனது கட்சி கொழும்பிலும் போட்டியிடும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும், அதன் போது தான் மீண்டும் நாடாளுமன்றம் செல்வேன் என்றும் நம்பிக்கை வெளியிட்டதோடு, ஆட்சியில் இருப்பவர்களுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கட்சியின் கொள்கையின்படி இணைந்து செயற்பட உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தமை நினைவுகூறத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version