Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பில் ஈ.பி.டி.பி கட்சி போட்டி – டக்ளஸ் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பில் ஈ.பி.டி.பி கட்சி போட்டி – டக்ளஸ் அறிவிப்பு

0

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி (epdp) கொழும்பிலும்
போட்டியிடும் என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா
தெரிவித்துள்ளார்.

யாழ். தெல்லிப்பளை – மாவைகலட்டி பகுதி மக்களை இன்று (29.9.2024) மாலை ஈழ மக்கள் ஜனநாயகக்
கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா
சந்தித்து கலந்துரையாடினார்.

மாநிலத்தில் சுயாட்சி

சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே
டக்ளஸ் தேவானாந்தா (Douglas Devananda) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு மக்கள் மத்தியில் உரையாற்றிய டக்ளஸ் தேவானாந்தா, தான் மீண்டும்
நாடாளுமன்றம் செல்வேன் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தலின் பின்னர் ஆட்சியில்
இருப்பவர்களுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கட்சியின்
கொள்கையின்படி இணைந்து செயற்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version