Home இலங்கை அரசியல் ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணிக்குள் குழப்பம்! புதிய கட்சி உருவாகும் என்கிறார் பிரதித் தலைவர் திலிப்குமார்

ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணிக்குள் குழப்பம்! புதிய கட்சி உருவாகும் என்கிறார் பிரதித் தலைவர் திலிப்குமார்

0

ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக
அக்கட்சியின் பிரதி தலைவர் உள்ளிட்ட சிலர் கட்சியை விட்டு விலகி செல்லவுள்ளதாக
பிரதித் தலைவர் ந. திலிப்குமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று பிற்பகல் (28.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பதவி விலகல்

கட்சியின் செயலாளர் இராஜநாதன் பிரபாகரனுக்கும் (பிரபா) சில திருவாக
உறுப்பினர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டதன் விளைவாக கட்சியின் உப தலைவரும்
மத்திய குழு உறுப்பினருமான ந. திலிப்குமார் மற்றும் கட்சியின் சர்வதேச
ஒருங்கிணைப்பாளர் வேலுப்பிள்ளை நவரெட்ணம் உள்ளிட்ட சில உறுப்பினர்களும்
குறித்த ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியை விட்டு விலகி தமது பதவிகளை விட்டு விலகவுள்ளதாக கூறியுள்ளனர்.

அத்துடன், ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இராஜநாதன் பிரபாகரன் கட்சி தொடர்பாக
தன்னிச்சையாக செயற்படுவதாகவும் இவர் தனக்கு மரண அச்சுறுத்தல்
விடுத்துள்ளதாகவும் உப தலைவரும் மத்திய குழு உறுப்பினருமான ந. திலிப்குமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் புத்திஜீவிகள், பல்கலை கழக மாணவர்களின் ஆலோசனைக்கு
அமைவாக தாம்
ஒரு புதிய தனிகட்சி ஒன்றினை உருவாக்கவுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version