சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தலைமறைவாக சுற்றி வரும் குணசேகரன் மற்றும் தம்பிகள் தற்போது ஜனனி தொடங்க இருக்கும் கடையை எப்படி அழிக்கலாம் என்று தான் திட்டம் போட்டு வருகின்றனர்.
இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எல்லோரையும் எதாவது செய்ய போவதாக கதிர் ஆவேசமாக பேசுகிறார்.
இனி குணசேகரன் வர வாய்ப்பில்லை
எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோவில் விசாலாட்சியின் சகோதரர் வீட்டுக்கு வருகிறார். அங்கு பெண்கள் எல்லோரிடமும் அவர் பேசுகிறார்.
இனி குணசேகரன் திரும்பி வர வாய்ப்பே இல்லை என அவர் கூறி இருக்கிறார். ப்ரோமோவை பாருங்க.
