Home இலங்கை பொறுப்புக்கூறலை முன்னெடுக்குமாறு இலங்கையை வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

பொறுப்புக்கூறலை முன்னெடுக்குமாறு இலங்கையை வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

0

Courtesy: Sivaa Mayuri

நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும், சிவில் சமூக ஈடுபாட்டிற்கு முழு இடத்தை வழங்குவதற்கும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கும் இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் (European Union) வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் நேற்று (09) ஜெனீவாவில் (Geneva) உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு எதிர்கொண்ட சவால்களை, குறிப்பாக 2022 நிதி நெருக்கடி தொடர்பாக, அங்கீகரிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

இந்தநிலையில், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு, திட்டமிட்டு உருவாக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் நன்கு கவனித்தாலும்,அதன் பணி பற்றிய தெளிவான வரைவை எதிர்ப்பார்ப்பதாக ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையின் முன்னேற்றம் இல்லாதது குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version