Home இலங்கை அரசியல் இனப்பிரச்சினை குறித்து அரசாங்கம் மீது முன்னாள் எம்.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

இனப்பிரச்சினை குறித்து அரசாங்கம் மீது முன்னாள் எம்.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

0

தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று
இல்லை என அரசாங்கமும், பல்வேறு அரசியல்
கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருவதாக முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் (Sivasakthy Ananthan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை மன்னாரில் நேற்று (21) இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு கடந்த 75 வருடங்களாக ஒரு தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்றது.

தேசிய இனப் பிரச்சினை

தேசிய இனப் பிரச்சினைக்காக பல வருடங்களாக அகிம்சை ரீதியாகவும் மற்றும் ஜனநாயக ரீதியாகவும் தமிழ் மக்கள் போராடியுள்ளனர் இதனால்
ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை முன் நிறுத்தி நாங்கள் வடக்கு கிழக்கில்
எமது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

இந்த தேர்தல் காலத்திலே அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை இல்லை
என்பதை கூறி கொண்டுள்ள அதே நேரத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஜனநாயக
தமிழ் தேசிய கூட்டணியை தவிர ஏனையவர்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று
இல்லை என அரசாங்கத்தின் அதே நிலைப்பாட்டுடன் ஆதரவாக பல்வேறு அரசியல்
கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் இத்தேர்தல் களத்தில் செயல்பட்டு
வருகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version