Home முக்கியச் செய்திகள் ரணிலுக்கான பாதுகாப்பு நீக்கம்: காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

ரணிலுக்கான பாதுகாப்பு நீக்கம்: காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

0

புதிய இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக தற்போது 50 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள், 6 ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் மற்றும் 163 காவல்துறை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பு அதிகாரியுடன் நீக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முற்றாக நீக்கம்

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அனைத்து அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட 307 காவல்துறை உத்தியோகத்தர்களும் 24 தற்காலிக உத்தியோகத்தர்களும் நாடளாவிய ரீதியில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version