Home இலங்கை சமூகம் சுதந்திரபுரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு பணி

சுதந்திரபுரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு பணி

0

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக
சந்தேகிக்கப்படும் சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்றையதினம் (14) காலை அகழ்வு பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

குறித்த அகழ்வு பணியானது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.மஹ்ரூஸ் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது.

விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட
நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்,
புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

அகழ்வு பணிகள்

பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று
வருகின்றது.

தற்போது அகழ்வு இடம்பெறும் பகுதியில்
2021 ஆம் ஆண்டு அகழ்வு இடம்பெற்று எதுவும் கிடைக்காத நிலையில் மூடப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version